search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீருடை பணியாளர்கள்"

    • இன்று முதல் 3 நாட்கள் பயிற்சி வகுப்பு
    • வேலூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் தொடர்பு கொள்ளலாம்

    வேலூர்:

    வடக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து காவல் மாவட்டங்களிலும் பணிபுரியும் காவல்துறை, சிறைத்துறை,தீயணைப்பு துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களின் வாரிசுகள் மற்றும் இந்த மாவட்டங்களில் உள்ள அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு தமிழ்நாடு காவல்துறை படைதலைவர் உத்தரவின்படி வருகிற 18, 19-ந் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வேலூரில் நடைபெற உள்ளது.

    இதற்கு தகுதி உள்ளவர்களை தயார்படுத்தும் பொருட்டு இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பயிற்சி முகாம் வேலூரில் உள்ள டி.கே.எம். கலை கல்லூரியில் சிறப்பு பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்று விக்கப்படுகிறது.

    மேலும் தகவல்களுக்கு வேலூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 2256802, 9498181231 -ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளன.

    ×